தெம்பனிசில் அமைந்துள்ள டாருல் குஃப்ரான் பள்ளிவாசல் மறுகட்டுமான, மேம்பாட்டுப் பணிகள் நிறைவுபெற்று நேற்று மீண்டும் வழிபாட்டிற்குத் திறந்துவிடப்பட்டது. 1990ல் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல் கடந்த 2016ஆம் ஆண்டு மேம்பாட்டுப் பணிகளுக்காக மூடப்பட்டது. புதிய நிலத்தடி கார் நிறுத்தம், நான்காவது தளம், கூரையுடன் கூடிய மேல்தளம் என மேலும் மூன்று தளங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. அலுவலகப் பணிகள், இஸ்லாமியக் கல்வியைப் போதிப்பதற்காக வகுப்பறைகள் ஆகியவற்றுக்காக பள்ளிவாசலுடன் மேலும் இரு துணைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விரிவாக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசலில் இனி ஒரே சமயத்தில் 5,500 பேர் தொழுகை நடத்த முடியும். இதன்மூலம் சிங்கப்பூரின் ஆகப் பெரிய பள்ளிவாசல் என்ற பெருமையையும் இது பெறுகிறது. பள்ளிவாசல் திறப்புவிழா நிகழ்ச்சியில் சுற்றுப்புற, நீர்வளத் துறை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சிங்கப்பூரின் ஆகப் பெரிய டாருல் குஃப்ரான் பள்ளிவாசல் திறப்பு
23 Mar 2019 06:20 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2019 11:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!