ஈராண்டு தடை பாதியாகக் குறைப்பு

சிட்டிபேங்க் முன்னாள் தொடர்பு நிர்வாகி ஸெங் ஸியுமெய்க்கு விதிக்கப்பட்ட ஈராண்டு தடையை துணைப் பிரதமரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் ஓராண்டாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
வாடிக்கையாளர் ஒருவரைத் தவறாக வழிநடத்தும் வகையில் பொய் சொன்னதால் திருவாட்டி ஸெங், நிதித் துறையில் பணிபுரிய ஈராண்டு தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை கடந்த ஆண்டு மே 14ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என நாணய ஆணையம் அறிவித்திருந்தது.
முன்னதாக, 2016ஆம் ஆண்டிலேயே சிட்டிபேங்க் அவரைப் பணிநீக்கம் செய்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து திருவாட்டி ஸெங் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, அவரது மனு குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய மேல் முறையீட்டு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.
திருவாட்டி ஸெங்கின் மேல்முறையீடு குறித்து விசாரித்த அந்த ஆலோசனைக் குழு, தனது பரிந்துரையை திரு தர்மனிடம் சமர்ப்பித்தது. அதை ஏற்று, திருவாட்டி ஸெங்கின் தடையை அவர் ஓராண்டாகக் குறைத்து அறிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!