அடுத்த மாதம் 5ஆம் தேதி ஜூரோங் ஈஸ்ட் நிலையத்தில் ரயில் ஏறச் செல்லும் பயணிகள் அனைவரும் பாதுகாப்புச் சோத னைக்கு உட்படுத்தப்படுவர்.
'எக்சர்சைஸ் ஸ்டேஷன் கார்டு' என்ற அவசரகால ஆயத்தநிலைப் பயிற்சியின் ஒரு பகுதியாக நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ் எம்ஆர்டி நிறுவனமும் இணைந்து இந்தப் பாதுகாப்புச் சோதனையை மேற்கொள்ளவிருக்கின்றன.
பயணிகளில் சிலர் 'மெட்டல் டிடெக்டர்' எனும் உலோகத்தைக் கண்டறியும் சாதனத்தின் வழி யாகச் செல்லும்படி கேட்டுக்கொள் ளப்படலாம். அவர்களின் பயண உடைமைகள் ஊடுகதிர்ச் சோத னைச் சாதனங்களின் மூலம் சோதிக்கப்படலாம்.
இந்தப் பாதுகாப்புச் சோதனை யின்போது புதிய பாதுகாப்புச் சாதனத்தின் செயல்திறனையும் நிலப் போக்குவரத்து ஆணையம் சோதித்துப் பார்க்கும். அந்த நாளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தப் பாதுகாப்புச் சோதனை இடம்பெறும் என நிலப் போக்குவரத்து ஆணை யம்-எஸ்எம்ஆர்டி நேற்று வெளி யிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் சோதனையின் காரணமாக பயணத்திற்குச் சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள லாம். அதோடு, அளவில் பெரிய பொருட்களை எடுத்து வர வேண்டாம் என்றும் பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பெரிய பொருட்களைச் சோதிக்க அதிக நேரம் ஆகலாம் என்பதே இதற்குக் காரணம்.