கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் குத்தகைத் தொகையைச் செலுத்த முடியாததால் நேற்று மேலும் ஏழு விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைத்தது. இதையடுத்து, அந்த நிறுவனம் தரையிறக்கம் செய்த விமானங்களின் எண் ணிக்கை 54ஆக உயர்ந்தது.
கிட்டத்தட்ட ரூ.8,000 கோடி (S$1.56 பில்லியன்) கடனில் தத் தளிக்கும் அந்த நிறுவனத்தில் 23,000 பேர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் அடுத்த மாதத்திலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கு வோம் என்றும் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, ஏப்ரல் 30ஆம் தேதி வரை 13 அனைத்துலக வழித்தடங்களில் தனது சேவையை நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது.
அவற்றுள் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட, வாரம் ஏழு முறை இயக்கப்படும் புனே-சிங்கப்பூர் சேவையும் அடங் கும். அதேபோல, நாளொன்றுக்கு இருமுறை இயக்கப்படும் பெங்க ளூரு-சிங்கப்பூர் விமானச் சேவை யும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து அபுதாபி, தம்மாம், டாக்கா, ஹாங்காங், ரியாத் ஆகிய நகரங்களுக்கும் மும்பையில் இருந்து அபுதாபி, பஹ்ரேன், தம்மாம், ஹாங்காங் ஆகிய இடங்களுக்கும் ஏப்ரல் 30 வரை ஜெட் ஏர்வேஸ் விமானங் களை இயக்காது.
மும்பை-மான்செஸ்டர் விமான சேவை இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஏற்கெனவே அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
அத்துடன், டெல்லி, மும்பையில் இருந்து காத்மாண்டு, பேங்காக், தோஹா, குவைத், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கான விமானச் சேவைகளின் எண்ணிக் கையும் அந்த நிறுவனம் குறைத்து உள்ளது.
நாளொன்றுக்கு 600 விமானச் சேவைகளுக்கு மேல் வழங்கி வந்த ஜெட் ஏர்வேஸ், இப்போது அதில் நான்கில் ஒரு பங்கை மட் டுமே வழங்கி வருவதாகக் கூறப் படுகிறது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 54 விமானங்கள் தரையிறக்கம்
24 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2019 09:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!