சொத்து முகவர்கள் மீதான நம்பிக்கை உயர்ந்துள்ளது

சொத்து முகவர்கள் மீதான நம்பிக்கை உயர்ந்துள்ளது

1 mins read
2abc75ce-ffe2-423a-99aa-dc79235cafd1
-

சொத்து முகவர்கள் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உயர்ந்திருக்கிறது என்று சொத்து முகவர் மன்றத்தின் ஆகக் கடைசி ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இது சொத்து முகவர்களுக்கு உற்சாகத்தைத் திரும்ப கொண்டு வந்துள்ளது. அந்த ஆய்வில் பொதுமக்களில் 72 விழுக்காட்டி னர் சொத்து தொடர்பான தங்கள் எதிர்கால பரிவர்த்தனைகளுக்கு சொத்து முகவரை நாடுவோம் என்று தெரிவித்துள்ளனர். 2012ஆம் ஆண்டில் நடத்தப் பட்ட இந்த ஆய்வில் சொத்து முகவர்களுக்கான நம்பிக்கை விகிதம் 66 விழுக்காடாகவும் 2015ஆம் ஆண்டில் 60 விழுக் காடாகவும் இருந்தது. சொத்து தொழில்துறை உரு மாற்றத் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன் தொடர்பான திட்டங்கள் தான் சொத்து முகவர்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்த தற்கு முக்கிய காரணம் என்று தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார். தங்களுக்கு சேவையாற்றும் சொத்து முகவர்கள் மூன்று அல் லது அதற்கு மேற்பட்ட தொழில் நுட்பச் சாதனங்களைப் பயன்படுத் துவதைக் கண்ட வாடிக்கையா ளர்கள் உற்சாகமடைகின்றனர்.

சொத்து முகவர்கள் மீதான நம்பிக்கை இப்போது 72 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது என்று சொத்து முகவர் மன்றத்தின் ஆய்வு ஒன்று காட்டுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்