சிங்கப்பூரின் பொதுச் சேவை, தனியார் துறை ஆகியவற்றில் வலுவான இணையப் பாதுகாப்புக் கலாசாரத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டி ருக்கிறது. இதன் தொடர்பில் மக்களுக்குப் பயிற்சி அளித்து இணைய மிரட் டல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்கள், தீங்கி ழைக்கும் இணைய நடவடிக்கை களை அடையாளம் கண்டு அவற் றைத் தடுக்கும் ஆற்றல்களைப் பெருக்கும் என்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன். அரசாங்க மற்றும் தனியார் துறையின் அனைத்து ஊழியர்க ளும் கட்டயமாக இணையப் பாது காப்புக் கலாசாரம் பற்றி பயிற்சிக்கு அனுப்பப்படுவார்களா என்று தஞ்சோங் பகார் குழுத் தொகுதி உறுப்பினர் ஜோன் பிரேரா கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். "பொதுத் துறையில், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு விழிப் புணர்வுத் திட்டத்தை கடந்த ஜூலை மாதத்தில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
இணையப் பாதுகாப்பில் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான பங்கு உள்ளது
1 mins read

