கேலாங் வட்டாரத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் பத்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு போலிசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர்களைக் கைது செய்தனர்.
சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.
கேலாங் ரோட்டுக்கு வளைந்து செல்லும் லோரோங் 27ஏ-க்கும் 26க்கும் அருகிலுள்ள பாதசாரிகள் கடக்கும் இடத்தில் அந்த மோதல் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் கிட்டத்தட்ட 20 பேர் குழுமியிருந்ததைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று காட்டியது. அவர்கள் கூச்சலிடும் சத்தம் காணொளியில் கேட்டது.