உற்பத்தித்துறை ஊழியர்களுக்கு மின்னலக்கத் திறன்களை வளர்க்க உதவும் புதிய பயிற்சித் திட்டத்தை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தொடங்கியுள்ளது. 'ஒர்க்கர் 4.0 டிஜிட்டல் ரெடினஸ் சர்டிஃபிகெட்' (Worker 4.0 Digital Readiness Certificate) என்ற சான்றிதழ் இவ்வாண்டு குறைந்தது 1,000 உற்பத்தித்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
தொழிற்நுட்பர்களுக்கும் இணை நிபுணத்துவ ஊழியர்களுக்கும் இடையிலான திறன் இடைவெளியைக் குறைக்க இத்திட்டம் உதவும் என்று என்டியுசியின் துணை தலைமைச் செயலாளர் கோ போ கூன் தெரிவித்தார்.
மின்னிலக்கக் கருவிகள், புதிய தொழில்நுட்பங்கள், மென்பொருள் நிரலிடுதல் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் புதிய சான்றிதழ் கொடுக்கப்படும்.