‘மெக்டோனல்ட்ஸ்’ பர்கர் உணவில் பிளாஸ்டிக் துண்டு

தனது பர்கருக்குள் பிளாஸ்டிக் துண்டு இருந்ததாகக் கூறும் 'மெக்டோனல்ட்ஸ்' வாடிக்கையாளர் இது பற்றி போலிசாரிடம் புகார் செய்திருக்கிறார்.

திரு கிறிஸ்டஃபர் கோ 'மெக்டோனல்ட்ஸ்' உணவகத்தின் 'ஜூரோங் போல்' கிளையில் அந்த பர்கரை கடந்த வாரம் வாங்கியதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது. பர்கரை மென்றுகொண்டிருந்தபோது பிளாஸ்டிக் துண்டைக் கடித்த பிறகு தான் வாந்தி எடுத்ததாக திரு கோ கூறினார். திரு கோ அடுத்த நாள் மருத்துவரைக் காண ஜூரோங் பலதுறை மருந்தகத்திற்குச் சென்றபோது அவருக்கு இரண்டு நாள் மருத்துவ விடுப்பு கொண்டுக்கப்பட்டது. அதன் பிறகு அவர் தமக்கு நேர்ந்தது குறித்து போலிசாரிடம் புகார் செய்தார்.

திங்கட்கிழமை மாலை 6.25 மணிக்கு, 1 யுவான் சிங் ரோட்டில் உள்ள 'மெக்டோனல்ட்ஸ்'ஸில் 12.65 வெள்ளிக்கு பார்கருடன் வேறு சில பதார்த்தங்களை வாங்கியதாக 46 வயது திரு கோ தெரிவித்தார். பர்கர் மீது உருகி ஒட்டியிருந்த பிளாஸ்டிக் துண்டு பெரிதாக இருந்தததாக அவர் தெரிவித்தார். அந்த பர்கரைக் காட்டும் படங்கள் 'ஸ்டோம்ப்' செய்தித் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் பற்றி மெக்டோனல்ட்ஸ் உணவகம் அறிவதாகவும் உணவகம் திரு கோவுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அதன் பேச்சாளர் புதன்கிழமை தெரிவித்தார். தகவல் அறிந்தவுடன் நடந்தது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டதாக அந்தப் பேச்சாளர் கூறினார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!