சிங்கப்பூரில் விமானப் போக்குவரத்து நிர்வாகத் துறையில் ஆய்வு உருவாக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் உடன்பாடு ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது. சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் கையெ ழுத்திட்டு இருக்கும் அந்த உடன்பாட்டின்படி விமானப் போக்குவரத்து ஆய்வுக் கழகம் ஒன்று தோற்று விக்கப்படும்.
கட்டமைப்பு ஆற்றல், விமானத்திடல் நிர்வாகம் மற்றும் செலவு, விமான நிலைய இணைப்பு ஆற்றல், தகவல் பகிர்வு மற்றும் ஒன்றிணைந்து முடிவுகளை எடுத்தல் ஆகிய நான்கு துறைகளில் புதிய கழகம் ஆய்வுகளை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தப் புதிய கழகம், இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்து இருக்கும். விமானப் போக்குவரத்து செயல்முறைகள், கட்டணம், கொள்கை ஆய்வு ஆகியவற் றில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தும் வகையில் அமை கின்ற முதலாவது விமானப் போக்குவரத்து நிர்வாக ஆய்வு உருவாக்க நிலையமாக புதிய கழகம் இருக்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தப் புதிய கழகம் மேற்கொள்ளக்கூடிய விமானப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து நிர்வாக கொள்கை ஆய்வுகளுக்காக $11.6 மில்லியன் தொகையை இந்த ஆணையம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
விமானப் போக்குவரத்து ஆய்வுக் கழகம் அமைய உடன்பாடு
19 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2019 09:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!