திருமணம் மற்றும் பெற்றோராகுதல் போன்றவை பற்றி சிங்கப்பூரர்கள் கொண்டுள்ள கருத்துகளையும் யோசனை களையும் தெரிந்துகொள்ள தேசிய மக்கட்தொகை மற்றும் திறனாளர் பிரிவு விரும்புகிறது. அதன் தொடர்பில் Heybaby.sg எனும் இணையப்பக் கத்தை அப்பிரிவு தொடங்கியுள்ளது என்றும் அதன் மூலம் மக்கள் இளம் குடும்பங்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பதைத் தெரிவிக்கலாம் என்றும் மனிதவள அமைச்சரும் மக்கட்தொகை விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஜோசஃபின் டியோ தெரிவித்தார். இந்த இணையப்பக்கம் நேற்று முன்தினம் மாதாந்திர ஆய்வைத் தொடங்கியது. திருமணம், பெற்றோராகுதல் தொடர்பிலான விவகாரங்கள் பற்றி மக்களிடம் கருத்துகளை சேகரிக்கப்படும். இந்த ஆய்வு வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும்.
இளம் குடும்பங்களுக்கு ஆதரவளித்தல்: யோசனைகள் நாடப்படுகின்றன
1 mins read
-

