ஜோகூர் பாலத்தில் விபத்து; சிங்கப்பூரர் மரணம்

காலை உணவுக்காக மோட்டார் சைக்கிளில் மலேசியாவுக்குச் சென்றுகொண்டிருந்த இளம் சிங்கப்பூரர் விபத்துக்குள்ளாகிய சில நாட்களில் உயிரிழந்தார்.

29 வயது பொது ஊழியராகப் பணிபுரியும் காய் யூ ஹெங்கும் அவரது நண்பரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். ஜோகூர் பாலத்தின் மலேசியப் பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் தடத்தில் அந்த விபத்து ஏற்பட்டதாக ‌ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது.

விபத்து குறித்த தகவல் காலை 10.30 மணிக்குக் கிடைத்ததாக ஜோகூர் பாரு போலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த அந்த ஆடவர் ஜோகூர் பாருவிலுள்ள சுல்தான் அமினா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக மலேசியப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்த திரு காய், ஒரு வயது பெண் குழந்தையை விட்டுச் செல்வதாக அவரது சகோதரி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!