மலேசியாவிலிருந்து 23 நாய்க்குட்டிகளை 2016ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குள் கடத்தி வந்த ஆடவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். விலங்கு மற்றும் பறவைகள் சட்டத்தின் அடிப்படையில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.
சிங்கப்பூரரான 53 வயது சியாவ் யொன் சியோங், கள்ளத்தனமாக அந்த நாய்க்குட்டிகளைக் கடத்தி வந்தது மட்டுமல்லாமல், அவற்றுக்கு போதிய இடவசதி அளிக்காமல் கொண்டு வந்ததால், தேவையில்லாத வலியையும் கொடுமை யையும் புரிந்தார் என்றும் குற்றச்சாட்டு கூறுகிறது. மேலும் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததையும் சியாவ் ஒப்புக் கொண்டார்.
2016, அக்டோபர் 28ஆம் தேதியன்று தனது படகில் பெரிய துணிகளுக்கு அடியில் கூண்டுகளில் அடைக்கப் பட்ட நாய்க்குட்டிகளை போலிஸ் கடலோரக் காவல் படை யினர் கண்டுபிடித்தனர் (படம்). அவற்றில் 10 நாய்க் குட்டிகள் பின்னர் மாண்டன.
அடுத்த மாதம் சியாவுக்குத் தண்டனை விதிக்கப்படும். குற்றத்தின் கடுமையைப் பொறுத்து அவருக்கு $10,000 வரை அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.