இரண்டாவது பெரும் வர்த்தகப் பாதைத் திட்டம் தொடர் பிலான கருத்தரங்கில் பங்கேற்க பிரதமர் லீ சியன் லூங், ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு நேற்று சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்று சேர்ந்தார்.
முதல் முறையாக இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள் ளும் திரு லீ, இன்று உயர்மட்டத் தலைவர்கள் முன்னிலை யில் உரை நிகழ்த்துவார். நாளை அவர், சீன அதிபர் ஸி ஜின்பிங் தலைமையேற்கும் தலைவர்கள் வட்டமேசை கூட்டத் திலும் பேசுவார் என்று பிரதமர் அலுவலக அறிக்கை தெரி வித்தது.
அதிபர் ஸி உருவாக்கிய இந்தப் பெரும் வர்த்தகப் பாதைத் திட்டம், அக்காலத்துக்கு வர்த்தகப் பாதையையும் கடல் வர்த்தகப் பாதையையும் மீண்டும் உயிர்ப்பிப்பதுடன், சீனா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியாவின் இதர பகுதிகள் ஆகியவற்றின் துறைமுகங்கள், சாலைகள் ரயில் பாதைகள், தொழிலியல் மையங்கள் போன்றவை மூலம் இணைப்பதை மையமாகக் கொண்டிருக்கும்.
2017ம் ஆண்டில் நடந்த முதலாவது கருத்தரங்கில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் பங்கேற்றார். இப்போது பிரதமர் லீ உட்பட கிட்டத்தட்ட 40 நாடுகளின் தலைவர்களும் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். அவர் களில் இதர ஒன்பது ஆசியான் தலைவர்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், ஆஸ்திரியப் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இந்த உச்சநிலைக் கூட்டத்தில் பிரதமர் லீ, இதர நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுகளை நடத்து வார். இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த பல்வேறு உடன்பாடுகள் இந்த வருகையின்போது கையெழுத்திடப் படும்.
பிரதமருடன் திருமதி லீ, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, மூத்த அரசாங்க அதிகாரிகள் ஆகியோருடன் சென்றுள்ளனர். பிரதமர் நாடு திரும்பும் வரை துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார்.

