2020க்­குள் 500,000 வீவ கழகக்­ கட்டடங்­க­ளில் சூரியசக்தி தகடுகள்

1 mins read
fc6b05f8-e7a6-4616-9b6d-d9359b8ea16f
PHOTO: HDB -

எதிர்கா­லத் தலைமு­றை­யினருக்­ குப்­ பொருந்­தும் வகை­யில் 'மேல் நோக்கி', 'கீழ்நோக்கி', 'கடல் நோக்கி' என மூன்று திசை­க­ளில் சிங்கப்பூர் திட்டமிடுகிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்­ளார்.

நேற்று நடைபெற்ற 'இமேஜின் 2060' கருத்தரங்கில் பேசிய திரு வோங், 'மேல்நோக்கி' அம்­சத்­தில் சிங்கப்பூர் உயர்மாடிக்­ கட்ட­டத் தில் வசிக்­கும் பழக்­கத்துக்கு வந் திருந்தா­லும் இன்­னும் அதிக உய­ரத்துக்­குச்­ செல்லலாம் என்று கோடி காட்டி­னார்.

அதற்கு பாய லேபார் பகுதியை உதாரணமாகக்­ காட்டிய அமைச்­ சர், பீஷா­னின் நிலப்பரப்­பான 800 ஹெக்டர் நிலத்தைக்­ கொண்டு உள்ள இடத்­தில் உள்ள பாய லேபார் விமானத்தளம் 2030ஆம் ஆண்­டில் மற்றோர் இடத்துக்கு மா­றும்போது, அந்த இடத்­தில் உயர்மாடிக்­ கட்டடங்­க­ளும் தொழிற்பேட்டை­க­ளும் உருவாக்­ கப்படலாம் என்­றார்.

மேல்நோக்கி செல்லுதலுக்காக அவர் செங்குத்­தான பண்ணை பற்றி­யும் சூரியசக்தி தகடு பற் றியும் பேசி­னார். அடுத்த ஆண் டுக்­குள் 500,000 வீடமைப்பு வளர்ச்­சிக்­ கழக புளோக்­கு­க­ளில் சூரியசக்தி தகடுகள் பொருத்தப்­ படும் என்­றும் கூறி­னார்.