அவசரநிலைச் சூழலில் மேலதி காரியிடமிருந்து அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக முடிவெடுக்கும் அதி காரத்தை பொபுப்துறை முன் னிலை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
அவசர முடிவெடுக்கும்போது, பொதுவாக ஓர் அமைச்சின் தலை மையகத்தில் இருக்கும் ஒருவரின் மதிப்பீட்டுக்குப் பிறகு எடுக்கும் முடிவைக் காட்டிலும் சம்பவம் நடக்கும் இடத்தில் உள்ள முன் னிலை அதிகாரிகள் உடனடியாக முடிவெ டுக்கும் சிறந்த நிலையில் இருப்பார்கள்," என்று நேற்று நடை பெற்ற பொபுப்துறை உள் தணிக்கை மாநாட்டில் திரு சீ உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
தலைமைத் தணிக்கை அதிகாரி கோ சூன் போ, தலை மைக் கணக்காளர் அவ் ஃபூக் சிவென் உட்பட பொபுப்துறையைச் சேர்ந்த 300 உள்தணிக்கையாளர் கள் இந்த வருடாந்திர நிகழ்வில் பங்கேற்றனர். இதற்கு சிங்கப்பூர் உள்தணிக்கையாளர்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
அமைப்புக்குள் ஏற்படும் அபா யங்களைச் சமாளித்து, விதிமுறை களையும் நடைமுறைகளையும் மறுஆய்வு செய்யும் தற்போதைய செயல்பாடுகளைத் தாண்டி, உள் தணிக்கையாளர்கள் இத்தகைய புத்தாக்கத்துக்கும் பரிசோதனை களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சொன்னார்.
"அதிகாரி ஒருவர் நல்ல எண் ணத்துடன் நடைமுறை விதிகளைப் பின்பற்றாமல் ஒரு புதிய யோசனை யைச் செய்து பார்க்கும்போது, அவருக்கு எதிராக நாம் நடவ டிக்கை எடுப்போமா அல்லது அந் தச் செயலை மதிப்பிட்டு, அது தற் போதைய நடைமுறையைவிட சிறப் பானதாக இருந்தால், அதை நீக் குப்போக்குடன் ஏற்றுக்கொள் வோமா, "என்று திரு சீ கேள்வி எழுப்பினார்.
"இதற்கு எளிதான ஒரு பதில் இல்லை. ஆனால், முன்னிலை அதிகாரிகள் நிலைமைக்குத் தகுந்த நல்ல முடிவை எடுக்க அர சாங்கம் ஆதரவளிக்கும்.
"தானாக முடிவெடுத்தால் தவ றுகள் நிகழக்கூடும் என்ற அச்சத் தில் எதுவுமே செய்யாமல் இருப்ப தைக் காட்டிலும் பொபுப்துறை அதிகாரிகள் தைரியமாக முடிவெ டுக்கும் மனப்போக்கைப் பெற வேண்டும்," என்றும் அமைச்சர் விவரித்தார்.

