கிட்டத்தட்ட 64 மில்லியன் வெள்ளி செலவில் நிலப் போக் குவரத்து ஆணையம் மூன்று கதவுகள் கொண்ட ஈரடுக்குப் பேருந்துகளை வாங்கவுள்ளது. இவை அடுத்த ஆண்டு சாலை களில் வலம் வரவுள்ளன.
மொத்தம் 100 'யூரோ 6 டீசல்' வகை பேருந்துகள் இத்திட் டத்தின்கீழ் வாங்கப்படவிருக்கின் றன.
ஆணையம் இவ்வகை பேருந்து களை ஏற்கனவே சோதனையில் ஈடுபடுத்தியது. 2017ஆம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை 'டவர் டிரான்சிட்' போக்குவரத்து நிறுவனம், அதன் 143 பேருந்துச் சேவைக்காக மூன்று கதவு பேருந்தைப் பயன் படுத்தியது. அதே ஆண்டின் ஜூன் முதல் 2018ஆம் ஆண்டு ஜனவரி வரை 'எஸ்எம்ஆர்டி' நிறு வனம் 190, 901 ஆகிய பேருந்துச் சேவைகளுக்கு இவ்வகை பேருந் தைப் பயன்படுத்தியது.
மூன்றாவது கதவு இருப்பதால் பேருந்துகளில் மேலும் விரை வாகவும் சுமுகமாகவும் ஏறி இறங்க முடிந்ததாகப் பொதுமக்கள் கூறியதாகவும் இவ்வகை பேருந்து இருப்பதை வரவேற்றதாகவும் ஆணையம் கூறியது.
முன்னோட்டச் சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந் ததால் சென்ற ஆண்டு மே மாதத் தின்போது இவ்வகையான 100 பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை ஆணையம் கோரியது.
நூறு பேருந்துகளில் பாதி எண்ணிக்கை அலெக்சாண்டர் டென்னில் (சிங்கப்பூர்) நிறுவனத் திடமிருந்தும் மீதி 'எஸ்டி என்ஜினியரிங் லேண்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனத்திடமிருந்தும் பெறப்படும்.
இவ்வகை பேருந்துகளை வாங் குவதற்கான ஆகப் பெரிய கொள் முதல் நடைபெறுவது இதுவே முதல் முறை. தற்போது ஆணையத் தின் பேருந்து வழங்குநர்களாகவும் இவ்விரு நிறுவனங்கள் இருந்து வருகின்றன.
புதிய பேருந்துகள் சிங்கப்பூருக் குக் கட்டங்கட்டமாகக் கொண்டு வரப்படும் என்றும் அடுத்த ஆண்டு சாலைப் பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் என்றும் கூறப் படுகிறது.

