ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய பறக்கும் வாகனத்தை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. 'நியோ ஏரோனாட்டிக்ஸ்' நிறுவனம் பறக்கும் வாகனத்தை அமெரிக்கச் சந்தையில் வெளி யிடத் திட்டம் வைத்துள்ளது. நகர்ப்புற வாழ்க்கைக்காக போக்குவரத்புப் தேவைகளை இவ்வாகனம் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும் என்பது நிறுவனத்தின் நம்பிக்கை.
கிட்டத்தட்ட 15 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த வாகனம், 15 மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியது. தாழ்வான உயரத்தில் வான்வழி பயணங் களை மேற்கொள்வதற்காகவும் பொருட்களை விநியோகம் செய் வதற்காகவும் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக 'நியோ ஏரோனாட்டிக்ஸ்' நிறு வனத்தைத் தொடங்கிய அதன் தலைமை நிர்வாகி நியோ கொக் பேங் தெரிவித்தார்.