மலேசியாவுக்கு செல்லஅக்டோபர் முதல் வாகன நுழைவு அனுமதிக்­ கட்டணம்

மலேசியாவுக்கு செல்லஅக்டோபர் முதல் வாகன நுழைவு அனுமதிக்­ கட்டணம்

1 mins read

­வரும் அக்டோபர் மாதம் முதல் சிங்கப்பூரிலிருந்து மலேசியா வுக்­குள் செல்­லும் அனைத்து வாகனங்­க­ளும் வாகன நுழைவு அனுமதிக்­ கட்டணம் செலுத்த வேண்­டும் என்று மலேசிய அரசாங்­கம் தெரிவித்­துள்­ளது.

சிங்கப்பூரிலிருந்து கடற்பாலம், துவாஸ் இரண்­டாம் இணைப்பு மூலம் ஜோகூருக்­குச்­ செல்லுதல், மலேசியா-தாய்லாந்து எல்லை, மலேசியா-புருணை மற்­றும் மலேசியா-இந்தோனீசியா எல்லை ஆகிய மூன்று கட்டங்­க­ளாக இது அமல்­படுத்தப்­படும். மற்ற இரண்டு எல்லை­க­ளில் வாகன நுழைவு அனுமதிக்­ கட்டணம் வசூலித்தல் எப்­போது நடைமுறைப்­படுத்தப்­படும் என்று மலேசிய அரசாங்­கம் தெரிவிக்க­வில்லை.

பதிவு செய்யப்பட்ட வாகனங்­க­ளுக்­கான நுழைவு அனுமதி ஐந்து ஆண்டு­க­ளுக்கு செல்லுபடியா­கும். வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்­க­ளுக்­கான நுழைவு அனுமதி வில்லையை ஜோகூர் பாரு­வில் உள்ள தெற்கு நோக்­கிச்­ செல்­லும் விரைவுச்சாலை­யின் கெலாங் பாத்தா ஓய்விடம், பிளாசா அங்­சானா கடைத்­தொகுதி கார் திறந்த வெளி நிறுத்­துமிடம், பாண்­டான் லூப்­ ஓய்விடம், லிமா கெடாய் சாலை வரிக்கூடம் ஆகிய இடங்­க­ளில் பெற்றுக்­ கொள்ளலாம்.

வாகன நுழைவு அனுமதி வில்லைக்கு விண்ணப்­பிக்க https://vep.jpj.gov.my எனும் இணையப்பக்­கத்துக்­குச்­ செல்லலாம். வாகனம் பதிவு செய்யப்பட்டவு­டன் அதன் வில் லையைப் பெற்றுக்­கொள்ள அழைக்­கும் மின்னஞ்சல் வாகன உரிமையாளர்­க­ளுக்கு அனுப்பப்­படும். அக்டோபருக்­குப்­ பிறகு வாகன நுழைவு அனுமதி பெற்ற வாகனங்கள் மட் டுமே மலேசியாவுக்­குள் செல்ல அனுமதி­க்­கப்­படும் என்­றும் கூறப்பட்டது.