தெம்பனிஸ் ஸ்திரீட் 83, புளோக் 862Aயில் உள்ள அஞ்சல் பெட்டிகளுக்கு அருகில் இன்னும் அஞ்சல் பெட்டிகளில் போடப்படாத இரு கடிதக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள் ளன (படம்) என்று தெரிவித்துள்ள சிங்போஸ்ட் நிறுவனம் அதன் தொடர்பில் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறியது.
இது குறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த ஜோன் லி, அஞ்சல்பெட்டிகளுக்கு அருகில் உள்ள வேண் டாத விளம்பரத்தாட்களைப் போடும் பெட்டிக்குள் சில கடிதங்களையும் பொட்டலங்களையும் கண்டதாகக் கூறினார். அந்த இரு கடிதக்கட்டுகளைத் தன்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு அவர் சிங்போஸ்டுக்கு தகவல் கொடுத்தார்.
"இவ்வாறு நடந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட தவறுகள் நடந்திருக்கக்கூடாது. தீய நோக்கம் உள்ளவர்கள் இந்தக் கடிதங்களில் உள்ள முகவரிகளைப் பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபடக் கூடும்," என்றும் திருவாட்டி லி அக்கறை தெரிவித்தார்.

