அதிகமான எடை கொண்ட பயணப்பைகளுக்கான கட்ட ணத்துக்கு விலக்கு அளிக்க லஞ்சம் பெற்ற இரு விமான நிலைய துணை ஊழியர்க ளுக்கு நேற்று சிறைத் தண் டனை விதிக்கப்பட்டது.
முத்து ராஜா என்பவரிடம் இரு தடவை முறையே $500ம், $600ம் பெற்ற சிங்கப்பூர் நிரந் தரவாசியான 47 வயது அய் யாத்துரை கருணாநிதிக்கு 9 வாரச் சிறை விதிக்கப்பட்டது. அவர் $500 தண்டப் பணத் தையும் செலுத்த வேண்டும்.
சிங்கப்பூரரான 35 வயது கெரிஸிம் கிருபை ராஜ் தேவத், இந்தியாவைச் சேர்ந்த கஜேந் திரன் ரமேஷிடமிருந்து $630 பெற்றதால் ஏழு வாரச் சிறைத் தண்டனை பெற்றார். அவர் $630 தண்டப் பணத்தையும் செலுத்த வேண்டும்.
கிருபை ராஜ்ஜும் அய்யாத் துரையும் இப்போது அவர்கள் முன்பு பணியாற்றிய நிறுவனங் களில் வேலை செய்யவில்லை. அவர்களுக்கு லஞ்சம் கொடுத் தவர்கள் தேடப்பட்டு வருகிறார் கள்.

