சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தோன்றினாலும் அவற்றுக்குச் சுமூகமாகத் தீர்வு காண முயலும் அதேவேளையில் இரு நாடுகளும் தங்களுக்கிடை யிலான நல்லுறவைக் கட்டிக்காக்க வேண்டும் என்று மலேசியாவின் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள் ளார்.
"மலேசியாவின் சிறந்த அண்டை நாடாகவும் சிறந்த நட்பு நாடாகவும் சிங்கப்பூர் கருதப்படு கிறது. ஆனால் இரு நாடுகளும் வெவ்வேறு வகையில் பரிணமித் துள்ளன," என்று திரு அன்வார் நேற்று நடைபெற்ற பசிபிக் நாடு களுக்கிடையிலான வழக்கறிஞர் கூட்டம் மற்றும் மாநாட்டில் உரை யாற்றியபோது கூறினார்.
"சிங்கப்பூர் ஒரு கரடுமுரடான சமூகத்தைக் கொண்ட நாடாகத் தொடங்கினாலும், பேச்சுவார்த்தை என்று வரும்போது கொஞ்சம் கடி னமான நாடாக மாறிவிட்டது," என்று கூறிய திரு அன்வார் அதை மேலும் விவரிக்கவில்லை.
ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற அதே மாநாட்டில் இடம்பெற்ற கலந்துரை யாடலில் பங்கேற்ற திரு அன்வார், "இரு அண்டை நாடுகளும் பொது வான வரலாற்றைக் கொண்டுள் ளன. குடும்பப் பிணைப்புகளும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளதால் இரண்டும் இணைந்து நம்பிக்கை அடிப்படையில் பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் அதிக நன்மை கிடைக்கும்," என்று விளக்கினார்.
"இதுதான் நாட்டுத் தலைவர்க ளுக்குள்ள உணர்வு. ஆசியான் நாடுகளுடன் சிறந்த உறவு கொண்டிருப்பது முக்கியம் என் றாலும் அதைவிட முக்கியம் சிங் கப்பூருடனான நல்லுறவு.
"முன்னைய அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தின் விளைவாக மலேசியாவின் தற்போதைய அர சாங்கம் பொருளியல் பிரச்சினை களையும் பல மாற்றங்களையும் சந்தித்து வருகிறது.
"அப்படி இருந்தாலும் இரு நாடுகளும் தங்கள் நல்லுறவை மேலும் மேம்படுத்திக்கொள்ள புதிய வழிகளை ஆராய்வது முக் கியம்.
"இரு நாடுகளுக்கும் அவ்வப் போது சர்ச்சைக்குரிய விவகாரங் கள் நிகழும்போது, அவற்றுக்கு ஆக்கபூர்வமான வழிகளைப் பயன் படுத்தி, மிகக் கவனமாகத் தீர்வு காண்பது அதிமுக்கியம்," என்றும் திரு அன்வார் வலியுறுத்தினார்.
சிறையிலிருந்து விடுதலையான பிறகு நீதிக்கும் விடுதலைக்கு
மான தமது பேரார்வம் வலுவடைந் திருப்பதாகக் கூறிய திரு அன் வார், "எனக்குத் தவறிழைத்தவர் களை மன்னித்து விட்டேன். முடிந்துபோனதை நினைத்து வருத்தப்படப் போவதில்லை. எனது சொந்த விருப்பு வெறுப்பு களைக் காட்டிலும் எனது நாட்டின் முன்னேற்றமே எனக்கு முக்கியம்," என்றும் கருத்துரைத்தார்.
மலேசியாவின் அடுத்த பிரதம ராகப் பொறுப்பேற்க அவர் எவ் வாறு தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருகிறார் என்று கேட் கப்பட்டதற்கு, பிரதமர் பதவிக்குத் தாம் அவசரப்படவில்லை என்றும் பிரதமர் மகாதீர் மலேசியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் வழங்குவதே இப் போதைக்குத் தமது முன்னுரிமைக் கடமையாக உள்ளது என்றும் திரு அன்வார் எடுத்துரைத்தார்.

