பொய்ச்செய்தி தொடர்பான உத்தேச சட்டத்துக்கு எதிர்த் தரப்பு பாட்டாளிக் கட்சி அதன் எதிர்ப்பை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
எது பொய்ச்செய்தி என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அமைச்சர்களிடம் விடப்படுவதை எதிர்த்து தமது கட்சி அதனை எதிர்க்கிறது என்று அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரு மான திரு பிரித்தம் சிங் கூறினார்.
"பொய்ச்செய்தியாகக் கருதப்படுபவற்றை இணையத்தளத்தி லிருந்து அகற்ற அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லலாம். ஆனால் அது நீதிமன்றத்திற்குச் சென்ற பின்னர்தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். அது சட்டப்பூர்வமாகச் செய்யப்பட வேண்டும் என்றும் திரு பிரித்தம் விவரித்தார். எதையும் சட்டத்தின் அடிப்படை யில் மேற்கொண்டால் அனைத்துத் தரப்பினருக்கும் அது நியாய மாகத் தோன்றும் என்றும் திரு பிரித்தம் வலியுறுத்தினார்.