மத்திய போலிஸ் பிரிவு இம்மாதம் 10ஆம் தேதி மேற் கொண்ட அமலாக்க நடவடிக்கையில் 22 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு ஆண்களும் பத்து பெண்களும் சிக்கினர். அவர்கள் ரங்கூன் ரோடு, ஹேவ்லக் ரோடு, கோல்மன் ஸ்திரீட், ஜாலான் சுல் தான், சவுத் பிரிட்ஜ் ரோடு, டெம்பிள் ஸ்திரீட் ஆகிய வற்றில் போலிஸ் அதிகாரிகள் பாலியல் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான திடீர் சோத னைகளை நடத்தினர்.
அப்போது 25 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப் பட்ட ஏழு பெண்கள் மாதர் சாசனத்தின் அடிப்படை யில் பாலியல் குற்றங்களுக்காகக் கைது செய்யப் பட்டனர். மேலும் 51 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் சூதாட்டம் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். மற்ற இருவர் குடிநுழைவுக் குற்றங்களுக்காக கைதாகினர்.