மேம்பாலம் இடிக்கப்படுவதையொட்டி உட்லண்ட்ஸ் சென்டர் ரோட்டின் ஒரு பகுதி அடுத்த புதன்கிழமை வரை போக்குவரத்துக்கு மூடப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் வீவக தெரிவித்தது. விடியற்காலை ஒரு மணியிலிருந்து அதிகாலை 5.30 மணி வரை அந்தச் சாலை மூடப்படும்.
இதன் காரணமாக உட்லண்ட்ஸ் சென்டர் ரோடு, அட்மிரால்டி ரோடு சந்திப்பிலிருந்து உட்லண்ட்ஸ் ரயில் சோதனைச் சாவடி வரையிலான பகுதி பாதிக்கப்படும் என்று அது குறிப்பிட்டது. பழைய உட்லண்ட்ஸ் டவுன் சென்டர் இடிக்கப்படுவதால் இனி மேம்பாலத்துக்கு அவசியமில்லை என்று அது கூறியது.