"பொருளியல் சீரமைப்பு, புத் தாக்கத் திறன்மேம்பாடு, ஊழிய ரணிக்கான மறுதிறன் போன்ற வற்றில் சிங்கப்பூர் கவனம் செலுத்தி வருகிறது.
"இருப்பினும் அமெரிக்கா, சீனா இடையில் அதிகரித்துவரும் வர்த்தகப் பதற்றம் காரணமாக பொருளியல் நிலவரம் மோச மடைந்தால் சிங்கப்பூர் அரசாங் கம் அதற்கேற்ற வகையில் செய லாற்றத் தயாராக இருக்கிறது.
வர்த்தக, உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று இதனைத் தெரிவித்தார்.
பொருளியல் நிலவரம் மோச மடைந்து ஆட்குறைப்பு போன் றவை நிகழ்ந்தால் அதனைச் சமாளிப்பதற்கான இடையேற் பாட்டுத் திட்டம் எதுவும் உள்ளதா என்று கேட்டதற்குப் பதிலளித்த தொடர்பு தகவல் அமைச்சருமான திரு ஈஸ்வரன், அது பற்றி இப் போது பேசுவது என்பது மிகவும் முன்கூட்டிய ஒன்றாக இருக்கும் என்றார்.
இருப்பினும் அதற்கான தேவை ஏற்படின் உரிய நேரத்தில் அரசாங்க அமைப்புகள் ஒன்று சேர்ந்து செயல்படும் என்றும் தேவை யானவற்றைச் செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
"அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைப் போக்க முயற்சி எடுக்கும் என்று நாம் தொடர்ந்து நம்புவோம்.
"அவ்வாறு நிகழ்ந்தால் வர்த் தகப் பதற்றம் தொடர்பான கவ லைகள் நீங்கும் வாய்ப்பு ஏற்படும்.
"அதே சமயம் பொருளியல் அடிப்படை அம்சங்கள், திறன்கள் ஆகியவற்றை வளர்ப்பதிலும் சிங் கப்பூர் கவனம் செலுத்தும்," என் றார் திரு ஈஸ்வரன்.
'புத்திஸ்ட் ஃபெல்லோஷிப்' அமைப்பின் விசாக தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய திரு ஈஸ்வரன், இதுபோன்ற நிச்சயமற்ற நில வரங்கள் சிங்கப்பூருக்குப் புதி தல்ல என்றார்.
"எனவேதான் நிறுவன, தனிப் பட்ட அளவிலான நமது பொருளி யல் அடிப்படை அம்சங்கள் மீது உறுதியான கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை
அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத் துகிறது. மேலும், நமது ஒருங் கிணைந்த, நல்லிணக்க சமு தாயத்தை வலுப்படுத்துவதையும் நாம் தொடர வேண்டும்.
மேலும், எந்த வகையான நிச் சயமற்ற தன்மையிலும் சிங்கப் பூரின் தொடர் வெற்றிக்காக அர சாங்கம், தொழில்துறை, சிங்கப் பூரர்கள் அனைவரும் ஒன்றி ணைந்து பணியாற்றுவது இன்றி யமையாதது," என்று திரு ஈஸ் வரன் தெரிவித்தார்.
தாராள வர்த்தக உடன்பாட் டின் மூலம் சிங்கப்பூர் தனது சந்தைகளைப் பன்முகப்படுத்தும் நடவடிக்கையைத் தொடரும் என்றும் அவர் கூறினார்.