தீவு விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை (மே 24ஆம்) ஏற்பட்ட விபத்தில் 33 வயது சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச்செல்லும் தீவு விரைவுச்சாலையில் ஏற்பட்ட அந்த விபத்து குறித்த தகவல் அதிகாலை 3.33 மணிக்கு போலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதை துணை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர். மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி விழுந்ததாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்தது.
சம்பவத்தைப் போலிசார் விசாரித்து வருகின்றனர்.