தீவு விரைவுச்சாலையில் நேற்று அதிகாலையில் நடந்த விபத்தில் 33 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத் திலேயே மரணமடைந்தார். சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில், பாய லேபார் ரோடு வெளிச்சாலைக்கு அருகில் நிகழ்ந்த விபத்து பற்றி தங்களுக்கு அதிகாலை 3.33 மணிக்கு தகவல் கிடைத்தது என்று போலிஸ் தெரிவித்தது.
சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கியது என்று அறியப்படுகிறது. விபத்து குறித்து போலிஸ் விசா ரித்து வருகிறது.