மெர்டேக்கா தறைமுறையைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு அட் டைகள் அடுத்த மாதத்திலிருந்து அவர்களுக்கு அனுப்பி வைக்கப் படும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்துள்ளார்.
1950 முதல் 1959ஆம் ஆண்டு வரை பிறந்த மற்றும் 1996ஆம் ஆண்டுக்குள் குடியுரிமை பெற்ற சுமார் அரை மில்லியன் சிங்கப் பூரர்களில் முதல் 80,000 பேர் தங்கள் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புகளை ஜூன் மாதம் 2ஆம் தேதி முதல் நடைபெறும் சமூக நிகழ்ச்சிகளில் பெற்றுக் கொள்வார்கள்.
மற்றவர்களுக்கு அந்தத் தொகுப்பு அடுத்த மாதப் பிற்பகுதி யில் அவர்களின் வீடுகளுக்கு சிங்போஸ்ட் மூலம் அனுப்பி வைக் கப்படும்.
மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புகளைத் தயாரிக்கும் மீடி யாலிங்க் பிரின்டிங் சர்வீசஸ் நிறு வனத்துக்கு நேற்று வருகையளித்த டாக்டர் கோர், செய்தியாளர்களிடம் பேசினார்.
அந்தத் தொகுப்பில், மெர் டேக்கா தலைமுறை அட்டைகள் இருக்கும். அதைக் கொண்டு அவர்கள் இவ்வாண்டு நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து தனியார் மருந்தகம், பல் மருந்தகத்தில் ‘சாஸ்’ திட்டத்தின் கீழ் சிறப்பு வெளிநோயாளி பராமரிப்புக் கட்ட ணக் கழிவுகளைப் பெறுவார்கள்.
இந்தச் சலுகையில் அவர்களின் வருமானம் என்ன, அவர்கள் வசிக்கும் வீட்டின் மதிப்பு என்ன போன்றவை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது.
மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் பற்றி நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், இவ் வாண்டு வரவு செலவுத் திட்ட உரையின்போது அறிவித்தார்.
மெர்டேக்கா தலைமுறை வரவேற்புத் தொகுப்பில் இடம்பெற்ற பொருட் களுடன் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்