ஹெங்: சவால்களைச் சமாளிக்க தொழில்நுட்பம்

நாடுகள் எதிர்நோக்கும் சவால் களைத் திறம்பட சமாளிக்க அவை ஒன்றிணைந்து தொழில் நுட்பத் திறன்களை உருவாக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.

சீனாவில் புத்தாக்கம் தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், இருதரப்பு ஒத்துழைப்பு மன்றம், புதிய சிங்கப்பூர் - ஷங்காய் முழுமையான ஒத்துழைப்பு மன்றம் போன்றவை மூலம் சீனாவுடன் இணைந்து சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயும் என்றார். இந்த இரு மன்றங்களுக்கும் திரு ஹெங் இணைத் தலைவராக உள்ளார்.

உலகெங்குமுள்ள அறிவியல் அறிஞர்கள், புத்தாக்க வல்லுநர் களுடன் இணைந்து செயல்படு வதற்கான வாய்ப்புகளை நாம் ஆராய வேண்டும், ஆராய முடியும் என்று அவர் கூறினார்.

நாடுகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலமே உணவுப் பாதுகாப்பு, அதிகரித்து வரும் புற்றுநோய் சம்பவங்கள் போன்ற பிரச்சினைகளை நாம் சமாளிக்க முடியும்.

ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகள் அடங்கிய மூன்று உத்திகளைக் கொண்டது சிங்கப்பூரின் அணுகு முறை. இதன் மூலம் தொழில்நுட்பம் வழங்கங்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவதை சிங்கப்பூர் இலக்காகக் கொண்டுள்ளது. இது முதல் உத்தி என்று தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவருமான திரு ஹெங் கூறினார்.

சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள், புத்தாக்கம் தொடர்பாக முழுமையான அணுகு முறையைக் கொள்வது ஆகியவை மற்ற உத்திகள் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!