சிங்கப்பூரில் பொதுப் பேருந்துகள் மட்டுமே செல்வதற்கான சாலை கள் எதிர்காலத்தில் அமைக்கப் படலாம். பேருந்துகளில் வேகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த யோசனை நிலப் போக்குவரத்து ஆணையத்தில் 2040 நிலப் போக்குவரத்துப் பெருந் திட்டத் தின் ஒரு பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது.
அடுத்த ஆண்டிலிருந்து தீவெங்கும் பொது மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்த வலியுறுத்தப்படும் பாதை களில், சில சேவைகளுக்கு முன் னுரிமை வழங்கும் பகுதிகள் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப் படும் என்று ஆணையம் கூறியது.
ராபின்சன் சாலை, லோயாங் சாலை, உட்லண்ட்ஸ் நார்த் கோஸ்ட், தெங்கா, ஜூரோங் லேக் வட்டாரம் உட்பட தற்போதுள்ள சாலைகளிலும் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள சாலைகளி லும் சாலைச் சந்திப்புகளில் போக்குவரத்து விளக்குகளுடன் பேருந்துகளுக்கு முன்னுரிமை, பேருந்துகளுக்கு மட்டுமேயான தடம் போன்றவற்றை அறிமுகப் படுத்த ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
பேருந்துகள் வேகமாகச் செல் வதற்கு உதவும் விவேகமான தீர்வுகளைக் கண்டறிய தொழில் துறையினருடன் சேர்ந்து செய லாற்றுவதாக ஆணையம் கூறியது. வாகனங்கள், நடையர்கள் இருப்பதை உணரும் விவேகமான போக்குவரத்து விளக்கு கட்டுப் பாட்டு கட்டமைப்பு உட்பட நவீன மான முறைகள் ஆராயப்படு கின்றன.
தற்போது பேருந்துகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் பாதை பென்கூலன் சாலையில் மட்டுமே உள்ளது. 2017ல் அமைக்கப்பட்ட இந்தச் சாலையின் நான்கு தடங்களில் மூன்று தடங்கள் ஒரு பேருந்து தடம், ஒரு சைக்கிள் பாதை, அகலமான நடையர் பாதை ஆகியவையாக மாற்றப்பட் டுள்ளன.
இதன்மூலம், பேருந்து பயணி கள் தங்கள் பயண நேரத்தில் 15 நிமிடங்களைச் சேமிக்க முடியும் என்றது ஆணையம்.