ரமலான் மாதத்தின் கடைசி நாள் ஜூன் மாதம் 4ஆம் தேதி என்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான ஜூன் மாதம் 5ஆம் தேதி புதன்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமயத் தலைவரான முஃப்தி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
சிங்கப்பூர் முஸ்லிம்கள் அனைவருக்கும் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளையும் முஃப்தி தெரிவித்துக் கொண்டார்.