லீ கொங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்தில் கிட்டத்தட்ட 200 முக்கிய இயற்கை வரலாற்றுக் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியை நேற்று (ஜூன் 3) கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ திறந்து வைத்தார்.
சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி நமது இயற்கையான சுற்றுச்சூழலைப் புரிந்துகொண்டு அதை மதிப்பிட வழிவகுக்கிறது என்றும், நமது உள்ளமைப்பு மேம்பாடுகள் பல்லுயிர் பெருக்கத்தின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விளக்குகிறது என்றும் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.