பதினோராவது மாடி வீட்டுச் சன்னலிலிருந்து கீழே விழுந்து இறந்த சிறுமியின் தாயார், சன்னலைத் தாழிடத் தவறியதற்காக வருந்துவதாகத் தெரிவித்தார்.
புளோக் 637 அங் மோ கியோ அவென்யூ ஆறில் இந்தச் சம்பவம் நடந்தது. அந்த ஆறு வயது சிறுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தின்போது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததாக வான்பாவ் செய்தி இதழ் தெரிவித்தது.