உட்லண்ட்ஸ் எம்ஆர்டி நிலைய வளாகத்திற்குள் உந்து நடமாட்டச் சாதனங்களை யாரும் ஓட்ட முடி யாதபடி எஸ்எம்ஆர்டி நிறுவனம் அங்கு உலோகத் தடுப்புகளை அமைத்து இருக்கிறது.
பரிசோதனை அடிப்படையில் இடம்பெறும் இந்த ஏற்பாடு, அத் தகைய சாதனங்களைப் பயன் படுத்துவோருக்கும் பொதுமக்க ளுக்கும் பாதுகாப்பை மேம்படுத் தும் நோக்கத்தில் இடம்பெறும் ஆகப் புதிய நடவடிக்கையாகும்.
இந்த ஏற்பாடு, ஆக்ககரமான ஒன்று என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தடுப்புக் கம்பி பரிசோதனை சென்ற வாரம் தொடங்கியது.
காஸ்வே பாயிண்ட் கடைத் தொகுதிக்குச் செல்லும் வழி போன்ற இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. உந்து நடமாட்டச் சாதனம், சைக் கிளை எம்ஆர்டி நிலையங்களுக் குள் ஓட்டக் கூடாது என்பது நிலப் போக்கு வரத்து ஆணையத்தின் விதிமுறையாகும்.
அத்தகைய சாதனங்களை மடித்து நிலையங்களுக்குள் எடுத்துவரவேண்டும். இந்தப் புதிய பரிசோதனை பற்றி கருத்து தெரி வித்த எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தொடர்புத்துறை தலைமை அதி காரி மார்கரெட் டியோ, “இப்போது உட்லண்ட்ஸ் எம்ஆர்டி நிலையத் தில் உலோகத் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.