அனைவரையும் உள்ளடக்கிய பொருளியல் வளர்ச்சிக்கு வித்திடவேண்டும்: மூத்த அமைச்சர் தர்மன்

சமுதாயத்தில் அனைவரும் வளரும் விதத்தில் ‘நகர்ந்துகொண்டிருக்கும் மின்படிகள்’ தேவை என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

பொருளியல், சமூக கொள்கைகளை வகுக்கும்போது அடிப்படையில் அதை கவனத்தில் வைத்துகொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிட்டனின் அரசாங்க ஆய்வுக் கல்விக் கழகத்தின் 10ஆம் ஆண்டு மாநாட்டில் சிறப்புரை ஆற்றியபோது இந்தக் கருத்துகளை திரு தர்மன் பகிர்ந்தார்.

வருமான இடைவெளி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறை கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

“மின்படிகள் நகராமல் இருந்தால் வருமான இடைவெளியை சீர்செய்யவோ சமூக முன்னேற்றத்தை முடுக்கிவிடவோ மேலும் கடினமாக இருக்கும்” என்ற அவர், “நகரும் மின்படிகளில் அனைவரும் ஏறினால் சமுதாயத்தில் சீரான ஓட்டம் இருக்கும்,” என கூறினார்.

லண்டனுக்கு ஐந்து நாள் வேலை நிமித்தமான பயணம் மேற்கொண்டிருக்கிறார் திரு தர்மன்.

எதிர்காலத்திற்கான சிங்கப்பூர்=இங்கிலாந்து பங்காளித்துவம் இவ்வாண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடந்து இருநாட்டு உறவை துடிப்புடன் வைத்திருக்கும் வகையில் அவரது பயணம் அமைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!