மாடிப்படியில் 12 வயது சிறுமி மானபங்கம் 

புகைப்படப் போட்டியில் பங்கேற்க உதவி தேவைப்படுவதாகக் கூறி 12 வயது சிறுமியை ஏமாற்றி மாடிப் படிக்கு வரவழைத்து மானபங்கப் படுத்திய பதின்ம வயதினரை 18 மாதம் நன்னடத்தைக் கண்காணிப் பின் கீழ் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது முழுநேர தேசிய சேவையாளராக இருக்கும் 18 வயது லெஸ்டர் ஓங் பெய் கோங் சில நிபந்தனைகளோடு மேற்பார்வையுடன் கூடிய நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டார்.

இதனால் இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி வரை அவர் வெளியே செல்ல முடியாது. மேலும் 120 மணி நேரம் அவர் சமூகப் பணியில் ஈடுபட வேண்டும்.

உளவியல் நிபுணரின் ஆலோ சனையை பெறவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிற்பகல் 3.15 மணியளவில் பெண்டிங் ரோடு புளோக் 233 மின்தூக்கி அருகே பள்ளியி லிருந்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை ஓங் அணுகினார்.

புகைப்படப் போட்டிக்கு படம் தேவைப்படுவதாக் கூறி சிறுமியை அவர் புளோக்கில் 2வது மாடிக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியின் பின்புறத்தை அவர் தொட்டார். ஆனால் தவறுதலாகப் பட்டுவிட்டதாகக் கூறிய அவர் சிறுமியிடம் மன்னிப்புக் கேட்டார்.

பின்னர் பல கோணங்களில் சிறுமியை நிற்க வைப்பதற்காக சிறுமியின் கை, கால்களைத் தொட்டார்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறிப் போகவே சிறுமி ஓடிவிட்டார்.

வீட்டுக்குச் சென்றதும் பெற்றோரிடம் சிறுமி நடந்த சம்பவத்தைக் கூற காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓங் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!