உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அதிகாரிகளிடம் கடந்த திங்கட்கிழமை தாங்கள் வாங்கிய பொருட்களுக்கான மதிப்பைக் குறைத்துக்கூறிய இரு மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவரான 30 வயது ஆடவர் 45 இயந்திர உதிரிபாகங்களின் விலையைக் குறைத்துக் கூறினார். அவருக்கு $330 அபராதம் விதிக்கப்பட்டது.
சில மணி நேரம் கழித்து, 33 வயது ஆடவர், 439 மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களின் விலையைக் குறைத்துக் கூறினார். அவருக்கு $1,565 அபராதம் விதிக் கப்பட்டது.
கைதான இருவரும் அந்தப் பொருட்களை சிங்கப்பூரில் விற்று லாபம் சம்பாதிக்கும் எண்ணத்தில் சுங்கச் சாவடியில் விலையைக் குறைத்துக் கூறினர் என்று சிங்கப்பூர் சுங்கத் துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.