இம்மாதம் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை வர்த்தக விவகாரப் பிரிவு, ஏழு போலிஸ் பிரிவுகள் நடத்திய ஐந்து நாள் திடீர் சோதனை நடவடிக்கையில் 53 ஆடவரும் 27 பெண்களும் மோசடிக் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் 16 வயதுக்கும் 68 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்கள் 212 இணைய மோசடிக் குற்றங்களில் சம்பந் தப்பட்டிருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோசடிச் செயல்கள் மூலம் $150,400 கைமாறி இருக்கிறது என்று நம்பப்படுகிறது.
இவர்கள் மோசடிச் செயல்கள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக விசாரிக்கப் பட்டு வருகிறார்கள் என்று போலிஸ் தெரிவித்தது.