தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு போலிஸ் அதிகாரி மரணம்

ஈசூன் நார்த் அக்கம்பக்க போலிஸ் நிலையத்தில் 28 வயது போலிஸ் அதிகாரி தலையில் துப்பாக்கிச் சூட்டுடன் நேற்றிரவு கிடந்தார்.

நேற்று இரவு 7.30 மணிக்கு போலிஸ் அதிகாரி வேலைக்குச் சென்றதாகவும் பணிக்கான துப்பாக்கியை அப்போது பெற்றதாகவும் போலிஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேற்றிரவு 9.30 மணிக்கு நிலையத்தின் இளைப்பாறும் இடத்தில் தனியாக அவர் காணப்பட்டார். அவர் அருகில் துப்பாக்கி இருந்தது.

கூ டெக் புவார் மருத்துவமனைக்கு சுயநினைவின்றி இருந்த அதிகாரியைக் கொண்டு சென்றதும் இரவு 10.26 மணிக்கு காயங்கள் காரணமாக அவர் மரணமடைந்தார்.

போலிஸ் படையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து புலனாய்வு செய்துவருகிறது. இயற்கைக்கு மாறான மரணமாக வகைப்படுத்தப்பட்ட இந்தச் சம்பவத்தின் பின்னணியில் குற்றச் செயல் ஏதும் இல்லை என்று நம்பப்படுகிறது.

அதிகாரியின் குடும்பத்தினருக்கு இந்தத் தருணத்தில் உதவி நல்கி வருவதாகவும் போலிஸ் படை தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!