சிலேத்தார் விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதியதில் மோட்டர் சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலை வெளிவாயில் 11க்கு முன்பு நடந்த அந்த விபத்து பற்றிய தகவல் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு வெள்ளிக்கிழமை ( ஜூன் 28ஆம் தேதி ) காலை 8.40 மணிக்கு ‘ஸ்டாம்ப்’ செய்தி இணையத்தளம் தெரிவித்தது. அந்த 23 வயது மோட்டார் சைக்கிளோட்டி சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக போலிஸ் பேச்சார் ‘ஸ்டாம்ப்’ தளத்திடம் தெரிவித்தார். விசாரணை தொடர்கிறது.