லிட்டில் இந்தியாவில் உள்ள அபிராமி ஜூவல்லர்ஸ் நகைக் கடை ஊழியர்கள் நால்வர் 167,000 வெள்ளி மதிப்புள்ள ஜிஎஸ்டி மோசடியில் சம்பந்தப் பட்டதற்காக நேற்று அபராதம் விதிக்கப்பட்டது.
33 வயது சண்முகம் சம்பத் குமாருக்கு 3,000 வெள்ளி அபராதமும் 42 வயது முருகேசன் சரவணனுக்கு 6,000 வெள்ளி அபராதமும் 49 வயது ஆறுமுகம் செல்லத்துரைக்கு 12,000 வெள்ளி அபராதமும் விதிக்கப் பட்டது.
இவர்கள் மூவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 46 வயது மலேசியரான பாங் வெய் கூன்னுக்கு 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
2015லிருந்து 2016ஆம் ஆண்டு வரை இந்த மோசடிக் குற்றங்களைப் புரிந்த இவர்கள் இன்னும் அந்த நகைக் கடையில் வேலை செய்கிறார்களா என்பது நீதிமன்ற ஆவணங்களில் தெரி விக்கப்படவில்லை.
இந்த ஏமாற்றுக் கும்பலின் மற்ற உறுப்பினர்களான 29 வயது கோதண்டராமன் ஞானம், 32 வயது கருணாநிதி ராஜேஷ், 42 வயது ராமைய்யன் கார்த்தி கேயன், 61 வயது வைத்திய லிங்கம் கருணாநிதி ஆகிய நால்வரும் 2017ஆம் ஆண்டில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அபிராமி ஜூவல்லர்ஸ் நகைக் கடை ஊழியர்களான சிங்கப்பூர ரான பழனியப்பன் ராமநாதன், 41, இந்திய குடிமக்களான மாணிக்கவாசகம் சரவணன், 41, குலமணி கணேசன், 31, ஆகிய மூவரின் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.