மகனை வதைத்த தாயாருக்குச் சிறை

ஆத்திரத்தில் மதியிழந்து தனது ஒரு வயது மகனை அடித்து மூளையில் காயப்படுத்திய 27 வயது தாயாருக்கு ஆறரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தாயாரின் செயலால் பிள்ளையின் மூளை வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘த நியூ பேப்பர்’ நாளிதழ் தெரிவித்தது.

வேண்டுமென்றே கடுமையான காயத்தை விளைவித்த ஒரு குற்றமும் பிள்ளையைச் சித்ரவதை செய்த மற்றொரு குற்றமும் அவர் செய்திருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை விதித்தபோது மேலும் நான்கு குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தனது பிள்ளையைக் காண அந்தத் தாய் செல்லவில்லை. அவனை அந்தத் தாய் தத்துக்கொடுக்கப்போவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மகன், அந்தப் பெண்ணின் மூன்று பிள்ளைகளில் இரண்டாமவன்.

இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக அந்தப் பிள்ளையை வயிற்றில் குத்தியதுடன் எலும்பு முறியும் அளவுக்கு அவனது கையை இழுத்திருக்கிறார் அந்தப் பெண். குற்றம் செய்தவர் தனது முதல் குழந்தையை 23 வயதில் பெற்றதாகவும் இளம் தாய்மை அவருக்குக் கடுமையான மன உளைச்சலைத் தந்ததாகவும் அந்தப் பெண்ணுக்காக வாதிட்ட தற்காப்பு வழக்கறிஞர் திரு ஜான் கோ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!