தொழிற்பயிற்சி பெற்ற டிப்ளோமா பட்டதாரிகளுக்கு அதிக சம்பளம்

பலதுறைத் தொழிற்கல்லூரி பட்ட தாரிகள், ஒன்றரை ஆண்டு நீடிக்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை செய்துகொண்டே படிக்கும் திட்டத்தை (இஎல்பி) மேற்கொண்டால், பட்டயக் கல்வி மட்டும் பெற்ற தங்கள் சகாக்களை விட அதிக சம்பளம் பெறுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

'இஎல்பி' திட்டத்தை முடித்தவர்களில் பெரும்பாலோர் வேலை செய்ய தொடங்கிவிடுவார்கள்.

அவர்களில் நான்கு விழுக்காட் டுக்கும் குறைவானர்கள் தன் னாட்சி பல்கலைக்கழகங்களில் மேற்கல்வியைத் தொடர சென்று விடுகின்றனர்.

வேலை செய்வோரின் சம்ப ளம் படித்து முடித்த ஆறு மாதங்க ளுக்குப் பிறகு மாதம் சராசரியாக $2,900 ஆக இருக்கும்.

ஒப்புநோக்க, பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயக் கல்வியை முடித்தவர்கள் அல்லது தேசிய சேவையை முடித்தவர்கள் வேலைக்குச் சென்று ஆறு மாதங் களுக்குப் பிறகு மாதம் $2,350 சம்பாதிக்கிறார்கள் என்று பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வு ஒன்று கூறுகிறது.

நன்யாங் தொழிற்கல்லூரியில் நேற்று பேசிய அமைச்சர் ஓங், “வர்த்தக தொழில் அமைச்சால் ஒன்றிணைக்கப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகள், பலதுறைத் தொழிற்கல்லூரி கல்வியை முடித் தவர்களுக்கு 'இஎல்பி' திட்டம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கிறது,” என்றார்.

“வேலை செய்துகொண்டே படிக்கும் திட்டத்தை முடித்தவர்க ளின் வேலைவாய்ப்பு, தனியார் பட்டக்கல்வியைப் பயிலச் செல்லும் பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகளைக் காட்டிலும் பிரகா சமாக உள்ளது.

“அவர்கள் தங்கள் தனியார் பட்டக்கல்விக்கு உயர்வான கட்ட ணம் செலுத்த வேண்டும். இஎல்பி திட்டத்தை முடித்தவர்களோ

வேலை செய்து அதன் வழி கிடைக்கும் ஊதியத்தைத் தங்கள் படிப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றும் அமைச்சர் விளக்கினார்.

2015ஆம் ஆண்டில் 12 துறை களைச் சேர்ந்த 15 திட்டங்களுடன் தொடங்கிய வேலை செய்து கொண்டே படிக்கும் திட்டம் இப் போது 34 துறைகளைச் சேர்ந்த 123 திட்டங்களாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு கணக்குப்படி, இதுவரை 4,200 பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் தொழில் நுட்பக் கல்விக் கழகப் பட்டதாரிகள் வேலை செய்துகொண்டே படிக்கும் திட்டத்தில் இணைந் துள்ளனர். 2015ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 150 ஆக இருந்தது.

வேலை செய்துகொண்டே படிக்கும் திட்டத்தில் சேர்ந்துள்ள முதலாளிகளின் எண்ணிக்கையும் இப்போது 1,000ஐ எட்டியுள்ளது. 2015ல் அது 46 ஆக இருந்தது.

வேலை செய்துகொண்டே படிக்கும் திட்டம் இப்போது விரிவ டைந்துள்ளதால், பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகளில் எட்டு விழுக்காட்டினர் இப்போது இஎல்பி திட்டத்தை பட்டயக் கல்விக்கும் பிந்திய நிலையில் பயில்கிறார்கள்," என்றும் கல்வி அமைச்சர் ஓங் யி காங் விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!