மியன்மாரில் அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் ஆயுதம் ஏந்திய போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட சிங்கப்பூரை பயன்படுத்திய மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஒரு குழுவினர் சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் புதன்கிழமை இரவு யங்கோன் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கியதாக மியன்மார் ஊடகம் தெரிவித்தது.
அரக்கான் சமூகத்தைச் சேர்ந் தோர் கைது செய்யப்பட்டதும் அதன் உறுப்பினர்களில் சிலர் தங்கள் அமைப்பை பயங்கரவாதக் குழுவாக அறிவித்துள்ள மியன் மார் அரசாங்கத்தின் வேண்டு கோளுக்கு இணங்க கைது நட வடிக்கை இடம்பெற்றுள்ளது என்று சமூக ஊடகத்தில் தெரிவித்தனர். ஆனால், அக்குழுவைக் கைது செய்ய சிங்கப்பூர் அரசாங்கத்தை தாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என்று மியன்மார் போலிசின் பேச் சாளர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அறுவரும் சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வர்கள் என்று கருதியதால்தான் உள்துறை அமைச்சு அவர்களைக் கைது செய்தது என்று அறியப்படு கிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மியன்மார் அரக்கான் ராணுவத் துக்கு நிதி திரட்டி ஆதரவளித்து இருக்கிறார்கள் என்றும் அந்த ராணுவத்தின் 10ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை இங்கு உள்ள சமூக மன்றம் ஒன் றில் நடத்தியதாகவும் அமைச்சு சொன்னது.
அந்நிகழ்ச்சியில் அரக்கான் ராணுவத்தின் தலைவர் துன் மியாட் நைய்ங் காணொளி இணைப்பு மூலம் பங்கேற்பாளர்களிடம் பேசி னார். அப்போது ராக்கைன் மாநில சுதந்திரத்துக்கு ஒன்று சேர்ந்து ஆயுதம் ஏந்தி போராடுமாறு அவர் களுக்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து வெளியேற் றப்பட்ட அறுவரில் ஒருவர் அரக் கான் ராணுவத் தலைவரின் உற வினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரிலுள்ள மியன்மார் நாட்டவரில் சுமார் 2,000லிருந்து 3,000 பேர் வரை அரக்கான் சமூகத் தைச் சேர்ந்தவர்கள். முன்னதாக, ராக்கைன் சங்கம் (சிங்கப்பூர்) என்று பதிவு செய்யப்பட்ட அமைப்பு பின்னர் அரக்கான் சங்கம் (சிங்கப்பூர்) என்று தன் பெயரை மாற்றிக்கொண்டது.
மியன்மார் நீர் திருவிழா, அரக் கான் சமூகத்தின் புத்தப்பிக்குவான சயாடாவ் யு ஓட்டமாவின் மறைவு போன்றவற்றை அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.