சிங்கப்பூர் போதைப் பொருள் குற்றங்களைப் புரிந்த மலேசியர்கள் நால்வரின் மரண தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் சிங்கப்பூர் அதிபரிடம் சமர்ப்பித்த கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு முன்னதாக விதிக்கப்பட்ட மரண தண்டனை இனி நிறைவேற்றப்படும் என்று மலேசியாவின் 'லாயர்ஸ் ஃபோர் லிபர்டி' அமைப்பு நேற்று தெரிவித்தது.
கடந்த ஒரு வாரத்தில் சிங்கப்பூர் அதிபர், தமது பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 10 கருணை மனுக்களை நிராகரித்து விட்டார் என்றும் அவற்றில் நான்கு மலேசியர் களின் மனுக்கள் என்றும் சொன்னார் அந்த அமைப்பின் ஆலோசகர் என். சுரேந்திரன்.
தட்சிணாமூர்த்தி காத்தையா, கோபி ஆவடியான், அப்துல் ஹெல்மி அப்துல் ஹலிம், ரஹ்மாட் ஆகியோரே அந்த நான்கு மலேசியர்கள்.