அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிக மழை

ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் இடியுடன் கூடிய மழை இன்னும் அதிகமாகப் பெய்யும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. சிங்கப்பூரிலும் தென்கிழக்காசிய வட்டாரத்திலும் வெவ்வேறு திசைகளிலிருந்து வீசும் காற்று ஒரே இடத்தில் குவிவதால் ஓரிரு நாட்களுக்குக் கனத்த மழை பெய்யலாம்.

சில நாட்களுக்கு முற்பகலிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை விட்டு விட்டுப் பெய்யும் என்றும் கூறப்படுகிறது. ஜூலையின் மழைப்பொழிவு வழக்கத்தைவிட சற்று குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பருவமழை மேகங்கள் தென்கிழக்காசியாவின் வடக்குப் பகுதியிலும் தென் சீனக் கடலின் வடக்குப் பகுதியிலும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சிங்கப்பூரிலும் சுற்றுவட்டார நாடுகளிலும் வறண்ட வெப்பநிலை ஏற்படும் என்றும் அவ்வப்போது பலத்த காற்றைக் கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக அன்றாட வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸுக்கும் 33 டிகிரி செல்சிஸுக்கும் இடைப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!