மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஓர் ஆடவரின் வாகனத்தில் ‘பாப் பாப்’ பட்டாசுகள் இருந்ததை துவாஸ் இரண்டாம் இணைப்பின் சோதனைச் சாவடி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மலேசியாவைச் சேர்ந்த அந்த 40 வயது ஆடவரின் காரிலுள்ள பயணி இருக்கையில் 150 ‘பாப் பாப்’ பெட்டிகள் இருந்ததைக் கண்ட அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவத்தைப் பற்றிய பதிவைக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்தப் பதிவு நகைச்சுவையான வாக்கியம் ஒன்றுடன் தொடங்கியது. அதேவேளையில், ஆபத்தான வாணவேடிக்கைப் பொருட்கள் தொடர்பான சட்டத்தின்படி ‘பாப் பாப்’ பட்டாசுகளை சிங்கப்பூருக்குள் கொண்டுவருவது குற்றம் என்றும் ஆணையம் எச்சரித்தது.