குடியுரிமை விண்ணப்பம்: பொய்யுரைத்த 'போலோ' ஆட்டக்காரருக்கு சிறை

சிங்கப்பூரின் மிகப் பிரபலமான 'போலோ' விளையாட்டாளரான 53 வயது அப்துல் சத்தார் கான் (படம்) இவ்வாண்டு நவம்பரில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பிறந்த அப்துல் சத்தார், 2006ஆம் ஆண்டில் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்திடம் சிங்கப்பூர் நிரந்தரவாசத்துக்கு விண்ணப்பித்தபோது தமது கல்வித் தகுதிகள் தொடர்பில் பொய்யான தகவல்களையும் சான்றிதழ்களையும் சமர்ப்பித்திருக்கிறார். ஈராண்டுகள் கழித்து அவருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதி வழங்கப்பட்டது. பின்னர் சிங்கப்பூர் குடியுரிமைக்கு அப்துல் சத்தார் விண்ணப்பித்தபோது, மீண்டும் தமது கல்வித் தகுதிகள் தொடர்பில் பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்தார். அவருக்கு 2009ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்பட்டது.

பொய்யான தகவல் அளித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அப்துல் சத்தாருக்கு நேற்று இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது சிஙகப்பூர் குடியுரிமைத் தகுதிக்குப் பாதிப்பு ஏற்படுமா என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

அப்துல் சத்தாருக்கு $10,000 பிணை அனுமதிப்பட்டுள்ளது. அவர் சிறைத் தண்டனைத் தொடங்க இம்மாதம் 23ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!