மற்றொருவரின் காரை கீறிய வழக்கறிஞருக்கு 2,500 வெள்ளி அபராதம்

ஏம்பர் கூட்டுரிமை வீடுகளில் வசிக்கும் வழக்கறிஞர் ஒருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொருவரின் காரைத் தன் சாவியால் கீறியதற்காக அவருக்கு 2, 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எவரெக்ஸ் சட்ட நிறுவனத்தின் இயக்குநர் 49 வயது இயன் சாங் யென் பிங், குறும்புச்செயலில் ஈடுபட்ட குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

ஜூலை மாதம் 31ஆம் தேதி, சாங் தனது காரை சுரங்கத் தளத்திலுள்ள கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தினார். அப்போது கார் நிறுத்தும் பகுதி ஒன்றில் திரு இயே யூ ஸி என்பவர் தனது காரைச் சரியாக நிறுத்தாததை சாங் கண்டார். 29 வயது திரு இயே சுயநலத்துடன் நடந்துகொள்வதாக சாங் கருதியதாக தற்காப்பு வழக்கறிஞர் லீ டெக் லேங் தெரிவித்தார். சாங், காருக்கு முன் செல்லும் காட்சியும் கீறல் சத்தங்களும் திரு இயேயின் காருக்குள் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகின. இது குறித்து திரு இயே ஆகஸ்ட் 1ஆம் தேதி போலிசாருக்குப் புகார் செய்தார். அந்த காரைக் கீறியது தானே என்று சாங் பின்னர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.

சாங் மன அழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாக இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி மனநலக் கழகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் குற்றத்திற்காக சாங்கிற்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!